Kathir News
Begin typing your search above and press return to search.

ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

மும்பையில் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யான்கான் உட்பட 20 பேரை கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கெடேவுக்கு பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Oct 2021 6:34 AM GMT

மும்பையில் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யான்கான் உட்பட 20 பேரை கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கெடேவுக்கு பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபகாலமாக போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை, கோவாக்கு இயக்கப்பட்டு வந்த சொகுசு கப்பலில் போதைப் பார்ட்டி நடைபெற்றது. அப்போது இதில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உட்பட 20 பேரை போதை தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கெடே தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

இந்நிலையில், மும்பை போலீசார் தன்னை பின் தொடர்வதாக சமீர் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் கூடுதலாக பாதுகாப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source,Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News