தலையில் 27 தையல்கள் - ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாபில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடூரம்!
By : Kathir Webdesk
இந்தி செய்தி நிறுவனமான அமர் உஜாலாவின் மூத்த பத்திரிகையாளர் அலோக் வர்மா, பஞ்சாபின் ஜிராக்பூரில் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம ஆசாமிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
அமர் உஜாலாவின் அறிக்கையின்படி , அலோக் வர்மா தனது பணி நேரம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இரு ஆசாமிகள் அவரைத் தாக்கினர். அலோக் வர்மாவை பேஸ்பால் பேட் மற்றும் அவரது தலையில் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு, அவரது பணப்பை மற்றும் கைப்பேசியுடன் தப்பி ஓடிவிட்டார்.
பத்திரிகையாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவரது தலையில் 27 தையல்கள் போட வேண்டியிருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் படுகாயம் அடைந்த அலோக் வர்மா கீழே விழுந்தார். இருப்பினும், தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்ந்து பத்திரிகையாளரை சரமாரியாக தாக்கினர். அலோக் வர்மா உதவிக்காக சத்தமிட்டுக் கொண்டே இருந்தார், ஆனால் யாரும் அவரைக் காப்பாற்றவில்லை. பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அலோக் வர்மா எப்படியோ தனது வீட்டை அடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிகாலை 3.45 மணிக்கு அலோக் வர்மா அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டதாக GMCH மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுதிர் கார்க் தெரிவித்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உள் காயங்கள் எதுவும் இல்லாததால் மதியம் 2.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கிடையில், சண்டிகர் பிரஸ் கிளப், பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யுமாறு பஞ்சாப் காவல்துறையை வலியுறுத்தியது. பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசு மற்றும் காவல்துறையை சண்டிகர் பிரஸ் கிளப் வலியுறுத்தியுள்ளது.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அமர் உஜாலா பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தைத் தாக்கி பேசியுள்ளார். பஞ்சாப் தெருக்களில் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றார்.