Kathir News
Begin typing your search above and press return to search.

வன்முறையாளர்களுடன் டீ குடித்த போலீஸ்! அரசாங்கத்துக்கு மட்டுமே தெரிந்த பிரதமர் செல்லும் பாதை, போராட்டக்காரர்களுக்கு கசிந்தது எப்படி?

Several proofs emerge suggesting Punjab Police may have been part of protestors that blocked PM Modi

வன்முறையாளர்களுடன் டீ குடித்த போலீஸ்! அரசாங்கத்துக்கு மட்டுமே தெரிந்த பிரதமர் செல்லும் பாதை, போராட்டக்காரர்களுக்கு கசிந்தது எப்படி?

MuruganandhamBy : Muruganandham

  |  6 Jan 2022 9:14 AM GMT

ஃபெரோஸ்பூரில் பிரதமர் மோடியின் வாகன பயணத்தை தடுப்பதில் பஞ்சாப் போலீசார் தீவிரமாக ஈடுபட்டது தற்போது நிரூபணமாகியுள்ளது. ஜனவரி 5 2022 அன்று பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹுசைனிவாலா அருகே, பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறலில் ஒரு முக்கிய அப்டேட் என, வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

இதில் பஞ்சாப் போலீசார் போராட்டக்காரர்களுடன் தேநீர் அருந்துவதைக் காணலாம். போராட்டக்காரர்கள் சிலர் பிரதமரின் வாகனத் தொடரணியுடன் ஓடுவதையும் தெளிவாகக் காணலாம். இந்த முழு நிகழ்வும், நாட்டிலேயே உயரிய பாதுகாப்பு கொண்ட பிரதமரின் பாதுகாப்பில் உள்ள தீவிரமான குறைபாடு ஆகும். இதில் அதிர்ச்சியான உண்மை என்னவென்றால், வாகனத் தொடரணிக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய போலீசார் , பிரதமருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் சாலை மறியல் செய்த எதிர்ப்பாளர்களுடன் தேநீர் விருந்தில் மும்முரமாக இருந்தனர்.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தை பார்வையிட பிரதமர் செல்லும்போது, ​​அவரது கான்வாய் சாலைகள் அடைக்கப்பட்டு, கான்வாயில் இருந்த வாகனங்கள் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டன. இருபது நிமிடங்களுக்கும் மேல் பிரதமரின் வாகனம் பலத்தின் மீது நின்றது. பத்திண்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் செல்வார் என்று முன்னதாக திட்டமிடப்பட்டது.

ஆனால் மோசமான வானிலை காரணமாக, வான்வழிப் பாதை ரத்து செய்யப்பட்டு, முப்பது நிமிட இடைவெளிக்குப் பிறகு பிரதமரின் கான்வாய் சாலைப் பாதை வழியாக பயணித்தது. இதன் போது பஞ்சாப் காவல்துறையினரால் பாதுகாப்பு மேலாண்மை உறுதி செய்யப்பட்டது. விவிஐபி இயக்க நெறிமுறையின்படி, சாலை வழியை எஸ்பிஜி மற்றும் பஞ்சாப் பொலிசார் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் பிரதமர் சாலை வழியாக பயணம் செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்ட பின்னர் பஞ்சாப் காவல்துறை அந்த வழியைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

பஞ்சாப் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தைத் தவிர வேறு யாருக்கும் பிரதமர் செல்லும் பாதை குறித்த தகவல் தெரியாது. அப்படி இருக்கும் போது, போராட்டகாரர்களுக்கு தகவல் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் பயணித்த கார் ஓரம் கட்டப்படும் வகையில், கான்வாய் வாகனங்கள் சிறிது நேரம் சிக்கின. இதைப் பார்த்து, அந்த வழியாகச் சென்ற போராட்டக்காரர்கள் பிரதமரின் வாகனத்தின் அருகாமையில் நேரடியாகச் சென்றனர். இது உண்மையில் ஒரு தீவிர பாதுகாப்பு பிரச்சினையாக இருந்தது. அங்கு இருக்கும் பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் சில நிமிடங்களுக்கு முன்பு துணை முதல்வருக்கு எளிதாகப் பாதுகாப்பாகச் செல்ல முடிந்தது, இப்போது அவர்களால் பிரதமருக்குப் பாதுகாப்பாகச் செல்ல முடியவில்லை. இது பாதுகாப்பில் ஏற்பட்ட குறையா அல்லது அவருக்கு ஏதேனும் தீங்கு விளைவிப்பதற்கான முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முயற்சியா? என்ற சந்தேகம் எழுகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News