Kathir News
Begin typing your search above and press return to search.

ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவு: இந்தியா ஒருநாள் தேசிய துக்கம்!

ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவு: இந்தியா ஒருநாள் தேசிய துக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  9 July 2022 1:14 AM GMT

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார. என்னுடைய அன்புக்குரிய நண்பரை இழந்துவிட்டேன் என்று அவர் தனது இரங்கலில் தெரிவித்திருந்தர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: எனது நண்பர்களில் ஒருவரான ஷின்ஜோ அபேயின் சோகமான மறைவால் நான் வார்த்தைக்கு வராத அளவில் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்திருக்கிறேன். அவர் ஒரு உலகளாவிய அரசியல்வாதி மட்டுமின்றி மிகச்சிறந்த தலைவரும் ஆவார். ஜப்பானுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்காகவும் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். எனக்கும் அவருக்குமான தொடர்புகள் பல ஆண்டுகளாக உள்ளது. நான் முதலமைச்சராக இருக்கும்போதே அவரை பற்றி அறிவேன். அதன் பின்னர் பிரதமர் ஆன பின்னர் எங்களின் உறவு தொடர்ந்தது.

மேலும், நான் ஜப்பான் சென்றிருந்தபோது அவரை சந்திக்கவும், பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தற்போது அவர் மறைவு நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவருடைய குடும்பத்தினருக்கும், ஜப்பான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என குறிப்பிட்டிருந்தார். மேலும், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே மறைவுக்கு இந்தியாவில் இன்று ஒருநாள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News