Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் ராணுவ வீரர்களை காக்கும் மோப்ப நாய்கள்: பயங்கரவாதிகளை அலறவிடும் புது டெக்னிக்!

காஷ்மீரில் ராணுவ வீரர்களை காக்கும் மோப்ப நாய்கள்: பயங்கரவாதிகளை அலறவிடும் புது டெக்னிக்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Oct 2022 3:51 AM GMT

கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, மறைந்திருக்கும் தீவிரவாதிகளை வெளியே கொண்டு வர, தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்களை எதிர்கொள்ள மோப்ப நாய்கள் நம்ப முடியாத வகையில் செயல்படுகின்றன. காஷ்மீரில் மோப்ப நாய்கள் கொண்ட தனிப்படைகள் பல உள்ளன.

அக்டோபர் 10-ம் தேதி தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மோப்ப நாயான ஜூம் முன்னே சென்றது. ஜூமின் முதுகில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. கண்காணித்துக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் விரைந்து சென்று, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இருவரையும் சுட்டு வீழ்த்தினர்.

படுகாயம் அடைந்த ஜூம், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது. தீவிரவாதிகளுடன் நேரடியாக மோத ஜூம் பயிற்சி பெற்றுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை பலவற்றில் ஜூம் பங்கேற்றுள்ளது.

ராணுவத்தில் விலங்குகளுக்கு 9 முதல் 12 மாதங்கள் வரை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளரின் லேசான சமிக்ஞைகளை கூட மிகத்தெளிவாக புரிந்து கொள்ளும் திறனை அவை பெறுகின்றன.

தேடுதல் வேட்டையின் போது இவை தேவையின்றி குலைப் பதில்லை. பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளரின் லேசான சமிக்ஞைகளை கூட மிகத்தெளிவாக புரிந்துகொள்ளும்.

Input From: News Glory

Next Story
கதிர் தொகுப்பு
Trending News