Kathir News
Begin typing your search above and press return to search.

இடதுசாரி சார்பு தீவிரவாதிகள் சிலர் விவசாயிகளின் போராட்டத்தில் ஊடுருவினர் - புலனாய்வுத் துறை பகீர் அறிக்கை.!

இடதுசாரி சார்பு தீவிரவாதிகள் சிலர் விவசாயிகளின் போராட்டத்தில் ஊடுருவினர் - புலனாய்வுத் துறை பகீர் அறிக்கை.!

இடதுசாரி சார்பு தீவிரவாதிகள் சிலர் விவசாயிகளின் போராட்டத்தில் ஊடுருவினர் - புலனாய்வுத் துறை பகீர் அறிக்கை.!

Muruganandham MBy : Muruganandham M

  |  12 Dec 2020 7:00 AM GMT

தீவிர இடதுசாரி மற்றும் இடதுசாரி சார்பு தீவிரவாதிகள் சிலர் விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்தி சென்றுள்ளனர் என்று புலனாய்வு வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தின.

இது வன்முறை மற்றும் தீ வைக்கும் செயல்களில் ஈடுபட விவசாயிகளைத் தூண்டுவதற்கான முயற்சிகள் இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இந்திய புலனாய்வு அமைப்புகளின்படி, விவசாயிகளுடனும் விவசாய நடவடிக்கைகளுடனும் எந்த தொடர்பும் இல்லாத மக்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை கையில் எடுக்கும் முயற்சியில் ஊடுருவியுள்ளனர்.

டெல்லி-ஹரியானாவைத் தவிர டெல்லி-ஜெய்ப்பூருக்கு இடையிலான விவசாயிகள் சங்கங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்த அச்சுறுத்தியதாக புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளும் வந்துள்ளன.

மேலும், விவசாயிகள் டிசம்பர் 14 ம் தேதி பாஜக தலைவர்களின் இல்லம், மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாகவும், ரிலையன்ஸ் மற்றும் அதானிக்கு வசம் உள்ள அனைத்து டோல் பிளாசாக்களையும் எதிர்க்கும் என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

விவசாய தொழிற்சங்கங்களுடனான பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்த முட்டுக்கட்டைக்கு வந்தபோதும், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. மூன்று விவசாய சட்டங்கள் குறித்து விவாதிக்க விவசாயிகளுக்கு பகிரங்க அழைப்பை விடுத்துள்ளது. கூடுதலாக, சட்டங்கள் குறித்த அச்சங்களைத் தீர்க்க பாஜக நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பத்திரிகையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News