Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கையின் வெற்றி இந்தியாவையே சாரும் - நன்றி உணர்வால் நெகிழ வைத்த அமைச்சர் அலிசப்ரி!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் இந்தியா செய்த உதவியால் ஓரளவு இப்பொழுது மீண்டுள்ள இலங்கை நன்றியோடு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கையின் வெற்றி இந்தியாவையே சாரும் - நன்றி உணர்வால் நெகிழ வைத்த அமைச்சர் அலிசப்ரி!
X

KarthigaBy : Karthiga

  |  28 Sept 2023 11:15 PM IST

இலகையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரூபாவின் பெறுமதி நிலையானதாக மாறியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இந்தியாவின் உதவி குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த ஆண்டை விட நாட்டின் நிலைமை மிகவும் சிறப்பாக உள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது, ரூபாவின் பெறுமதி நிலையானதாக மாறியுள்ளது, கையிருப்பு உயர்ந்துள்ளது, சுற்றுலா துறை வளர்ச்சியடைந்துள்ளது.இந்தியா 3.9 பில்லியன் மதிப்பிலான பல்வேறு உதவிகளை எங்களுக்கு வழங்கியுள்ளது. நாடு என்ற ரீதியில் இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இன்று நாம் அடைந்துள்ள நன்மதிப்பில் பெரும் பகுதி இந்தியாவையே சாரும் ” என கூறியுள்ளார்.

SOURCE :ibctamil.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News