உறைந்தது ஸ்ரீநகர்: 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட குளிர்.!
உறைந்தது ஸ்ரீநகர்: 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட குளிர்.!
![உறைந்தது ஸ்ரீநகர்: 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட குளிர்.! உறைந்தது ஸ்ரீநகர்: 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட குளிர்.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/019d7367f2c5c416a9d7566ce92cb3c1.jpg)
முன்னதாக ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகர் வெள்ளிக்கிழமை இரவு மைனஸ் 7.2 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்திருந்தது. ஜனவரி 13’ஆம் தேதி நகரத்தில் மைனஸ் 8.4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது. காஷ்மீர் பிராந்தியத்தின் நுழைவாயில் நகரமான காசிகுண்ட், மைனஸ் 10.2 டிகிரி செல்சியஸின் குறைந்தபட்ச வெப்பநிலையை பதிவு செய்தது. ஸ்ரீநகரில் நேற்று இரவு பதிவான மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸை விட இது குறைவானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கின் ஸ்கை ரிசார்ட்டில் குறைந்தபட்ச வெப்பநிலை முந்தைய இரவின் மைனஸ் 10.0 டிகிரி செல்சியஸிலிருந்து மைனஸ் எட்டு டிகிரி செல்சியஸாக குறைந்தது. தெற்கு காஷ்மீரில் ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரையின் அடிப்படை முகாமாகவும் விளங்கும் பஹல்காம் சுற்றுலா ரிசார்ட், மைனஸ் 12 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்தது. முந்தைய இரவின் வெப்பநிலையான மைனஸ் 12.5 டிகிரி செல்சியஸிலிருந்து சிறிதளவு குறைந்தது.
குப்வாரா மைனஸ் 4.7 டிகிரி செல்சியஸையும், தெற்கில் கோக்கர்நாக் குறைந்தபட்ச வெப்பநிலை 13.1 டிகிரி செல்சியஸையும் பதிவு செய்தது. கடுமையான குளிர் நிலைகள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நீர்நிலைகள் உறைந்து, குடிநீர் விநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. சில்லாய்-கலன் எனும் குளிர்காலம் அதிகாரப்பூர்வமாக இன்று முடிவடைந்தது. ஆனால் காஷ்மீரில் குறைந்தபட்ச வெப்பநிலை அடுத்த இரண்டு நாட்களுக்கு உறைபனிக்கு கீழே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.