Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கை.. ரூ.50,000 கோடியில் புதிய ஒப்பந்தம்!

இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கிய கப்பல்களை மாற்றுவது குறித்த பேச்சு வார்த்தை.

இந்திய பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கை.. ரூ.50,000 கோடியில் புதிய ஒப்பந்தம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Jun 2023 3:09 AM GMT

ராணுவம் மற்றும் தொழில்துறை உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வாரம் அமெரிக்கா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த லாயிட் ஆஸ்டின் மற்றும் போரிஸ் பிஸ்டோரியஸ் ஆகியோருடன் இருதரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஏனென்றால் இந்தியாவில் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை மாற்றுவது குறித்த பேச்சு வார்த்தையை தான் இது. ஜூன் 7 ஆம்தேதி அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார். அதே நேரத்தில் அவரது ஜேர்மன் பிரதிநிதியுடனான சந்திப்பு ஒரு நாள் கழித்து திட்டமிடப் பட்டுள்ளது.


போரிஸ் பிஸ்டோரியஸுடனான தனது உரையாடலின் போது, ​​இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆறு வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்காக சுமார் ரூ.50,000 கோடி ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்திய கடற் படையில் தற்போது இருக்கும் பழமையான நீர்மூழ்கிக் கப்பல்களை மாற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது, ​​ 16 வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது. 16 நீர்மூழ்கிக் கப்பல்களில், ஏழு ரஷ்ய கிலோ வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், நான்கு ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்த HDW நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஐந்து பிரெஞ்சு ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் இவற்றை மாற்றுவதற்கான முயற்சிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது.


பாதுகாப்பு துறை அமைச்சர் மட்டுமல்லாது விரைவில் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் இரு தலைவர்களும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் உறுதியான நடவடிக்கை மற்றும் தற்போதைய ரஷ்யா-உக்ரைன் மோதல்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News