Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டம் நீதிக்கான கருவி, அடக்கு முறைக்கானது அல்ல: தலைமை நீதிபதி!

சட்டம் என்பது நீதிக்கான கருவியாக இருக்க வேண்டும் அடுக்கு முறையில் கருவியாக இருக்கக் கூடாது என்று தலைமை நீதிபதி பேச்சு.

சட்டம் நீதிக்கான கருவி, அடக்கு முறைக்கானது அல்ல: தலைமை நீதிபதி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Nov 2022 10:06 AM GMT

டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் பேட்டி அளித்த தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், மக்களிடம் இருந்து எதிர்பார்ப்புகளை நாம் பெற்றிருப்பது என்பது மகத்தானது. ஆனால் நிறுவனங்கள் என்ற வகையில் கோர்ட்டுகளின் வரம்புகளையும், ஆற்றல்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் சட்டமும் நீதியும் ஒரே நீர் கோட்பாட்டில் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. சட்டம் என்பது நீதிக்கான கருவியாக இருக்க முடியும்.


ஆனால் அடக்குமுறைக்கான கருவியாக சட்டம் இருக்க முடியாது. இன்றைய சட்டப் புத்தகங்களில் உள்ள அதே சட்டம் காலனி ஆட்சிகளில் அடக்குமுறையின் கருவியாக எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம். எனவே சட்டம் நீதிக்கான கருவியாகவும் அடக்குமுறைக்கான கருவியாக இல்லாமல் இருக்கவும் நாம் இவ்வாறு உறுதி செய்வது என்பதை அறிந்திருக்கிறோம். நீதிபதிகள் மட்டும் இல்லாது முடிவெடுக்கும் இடங்களில் உள்ள அனைவரும் சட்டத்தை எவ்வாறு கையாளுகிறோம் என்பது முக்கியம்.


சட்டம் அடக்குமுறையின் கருவியாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வது முடிவை எடுக்கின்ற அனைவரின் பொறுப்பாகும். நீதி நீதித்துறையின் கேட்கப்படாத அவர்களின் குரல்களை கேட்கிற திறன் உங்களுக்கு இருந்தால் பார்க்கப்படாத முகங்கள் பார்க்கலாம். உங்களுக்கு சட்டத்திற்கும் நீதிக்கும் இடையே சமநிலை எங்கு உள்ளது என்பதை பார்க்க வேண்டும் பொழுது தான், ஒரு நீதிபதி நீங்கள் உங்கள் பணியை உண்மையாக செய்ய முடியும். சமூக ஊடகம் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. கோர்ட்டுகளில் ஒரு நீதிபதி கூறுகிற ஒவ்வொரு சிறிய வார்த்தை கூட கண நேரத்தில் உடனே வெளியிடப்பட்டு விடுகிறது. நீங்கள் ஒரு நீதிபதியாக தொடர்ந்து பதிவிடப்படுகிறது அல்லது வரவேற்கும் இறுதி தீர்ப்பையோ பிரதிபலிக்கவில்லை என்று கூறுகிறது.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News