Begin typing your search above and press return to search.
'தமிழக மக்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல' - நாடாளுமன்றத்தில் பல்டி அடித்தாரா தி.மு.க எம்.பி ராஜேஷ்குமார்
'தமிழக மக்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல ஹிந்தி திணிப்புக்கு தான் எதிரானவர்கள்' என தி.மு.க எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
'தமிழக மக்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல ஹிந்தி திணிப்புக்கு தான் எதிரானவர்கள்' என தி.மு.க எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பல்கலைக்கழக திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க எம்பி ராஜேஷ்குமார் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் பெயரை 'கதி சக்தி விஸ்வ வித்யாலயா' என இந்தியில் பெயர் மாற்றம் செய்வது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும் இது குறித்து தெரிவித்த அவர், 'இது தமிழகம் மற்றும் கேரள மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கை எனவும் உடனடியாக இதன் பெயரை இந்தி மற்றும் ரயில் போக்குவரத்து பல்கலைக்கழகமாக ஆங்கிலத்தில் மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் அவர் தமிழக மக்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல இந்தி திணிப்புக்கு தான் எதிரானவர்கள்' என கூறினார்.
Next Story