Kathir News
Begin typing your search above and press return to search.

8 தமிழக போலீசாருக்கு பதக்கம் அறிவித்த மத்திய அரசு!

சிறப்பான விசாரணை நடத்தியதற்காக தமிழகத்தை சேர்ந்த 8 போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

8 தமிழக போலீசாருக்கு பதக்கம் அறிவித்த மத்திய அரசு!

ThangaveluBy : Thangavelu

  |  12 Aug 2021 7:48 AM GMT

சிறப்பான விசாரணை நடத்தியதற்காக தமிழகத்தை சேர்ந்த 8 போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2021ம் ஆண்டில் சிறப்பான விசாரணை நடத்தியதற்காக நாடு முழுவதும் சுமார் 152 போலீசாருக்கு மத்திய உள்ளதுறை அமைச்சர் பதக்கத்திற்கு தேர்வாகியுள்ளனர். அதில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், உத்தர பிரதேசம், கேரளா மற்றும் ராஜஸ்தான் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்நிலையில், இந்த பதக்க பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 8 போலீசார் தேர்வாகியுள்ளனர். இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பர முருகேசன், கண்மணி உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2821746

Next Story
கதிர் தொகுப்பு
Trending News