Kathir News
Begin typing your search above and press return to search.

பயங்கரவாதிகளை மோடி அரசு இரும்பு கரங்களால் அடக்குகிறது - அமித்ஷா பெருமிதம்!

பயங்கரவாத அமைப்புகளை மோடி அரசு இரும்பு கரங்கள் கொண்ட அடக்குவதாக அமித்ஷா தகவல்.

பயங்கரவாதிகளை மோடி அரசு இரும்பு கரங்களால் அடக்குகிறது - அமித்ஷா பெருமிதம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Oct 2022 2:58 AM GMT

ஜம்மு காஷ்மீரில் பழங்குடியினருக்கு வழங்கப்படுவதை போல பஹாரி சமூகத்திற்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் இட ஒதுக்கீடு விரைவில் அளிக்கப்படும் என்று மத்தியில் உள்துறை அமைச்சர் அமிச்சார் நேற்று தெரிவித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் மற்றும் லடாக் யூனியன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீருக்கு அடுத்த ஆண்டு சட்டசபை செய்தல் நடக்க உள்ளது. இதை எடுத்து அங்கு சென்றுள்ள அதே உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் ரச உரிமை கிராமத்தில் நேற்று பிரமாண்டமான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.


அப்பொழுது அவர் பஹாரி சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அளிக்கும்படி மத்திய அரசு நியமித்த ஐ.டி சர்மா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இது விரைவில் நிறைவேற்றப்படும் பழங்குடி இனத்தவர்களுக்கு வழங்கப்படுவது போல பஹாரி இனத்தை சேர்ந்தவர்களுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீடு வழங்கப்படும். சிறப்பு அந்தஸ்து தரத்தால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. இந்த இட ஒதுக்கீடின் வாயிலாக பழங்குடியினருக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த அறிவிப்பு பிரதமர் மோடிக்கு தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றும் அவரது கைகள் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.


மூன்று குடும்பங்களின் பிடியில் இருந்து ஜம்மு காஷ்மீர் இப்போதுதான் விடுபட்டுள்ளது. இதற்கு முன்பு மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு அளித்து வந்த நிதியை சிலர் அபகரித்து வந்தனர். இப்பொழுது இந்த நிதி வளர்ச்சிக்காக செலவிடப்படுகிறது. பஞ்சாயத்து மற்றும் மாவட்ட கவுன்சில் தேர்தல் வாயிலாக முப்பதாயிரம் பெயர் அதிகாரம் பெற்றுள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளை மோடி அரசு இரும்பு கரங்களால் அடக்கி வருவதால் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் முன்பை விட சிறப்பாக உள்ளதாகவும் அவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: Oneindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News