Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் பிரதமர் மோடி அரசின் நடவடிக்கையால் தீவிரவாத தாக்குதல் 56 சதவீதம் குறைந்தது!

காஷ்மீரில் பிரதமர் மோடி அரசின் நடவடிக்கையால் தீவிரவாத தாக்குதல் 56 சதவீதம் குறைந்தது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Oct 2022 2:35 AM GMT

காஷ்மீரில் பிரதமர் மோடி அரசின் நடவடிக்கையால் தீவிரவாத தாக்குதல் 56 சதவீதம் குறைந்தது என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் முந்தைய ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகம் காரணமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்களும் ஊழலும் தலைவிரித்தாடின. தீவிரவாத தாக்குதலுக்கு இதுவரை 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

2014ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்ததும் காஷ்மீர் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இப்போது காஷ்மீர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாத சம்பவங்கள் 56% குறைந்துள்ளது. தீவிரவாதத்தால் உயிரிழக்கும் பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை 84 சதவீதம் குறைந்துள்ளது.

தீவிரவாதத்துக்கு ஆள்சேர்ப்பது, பாதுகாப்புப் படையினர் மீதான கல்வீச்சு சம்பவங்கள் குறைந்துள்ளன. இதற்குக் காரணம் என்னவென்றால், ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களே இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவித்தனர். அவர்கள் அதிகாரத்தை இழந்த பிறகு என்கவுன்ட்டர் சம்பவங்கள் குறைந்துள்ளன. தீவிரவாதிகள் சரணடைய இப்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நாடு சுதந்திரம் பெற்றது முதல் 2019 வரையில் காஷ்மீரில் வெறும் ரூ.19 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது எனக்கூறினார்.

Input from; hindu tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News