Kathir News
Begin typing your search above and press return to search.

100 பில்லியன் அமெரிக்க டாலர் ஜவுளி ஏற்றுமதிக்கு இலக்கு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

100 பில்லியன் அமெரிக்க டாலர் ஜவுளி ஏற்றுமதிக்கு இலக்கு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Oct 2022 9:34 AM GMT

பியூஷ் கோயல் வலியுறுத்தல்

தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதிய அளவு பருத்தியை இருப்பு வைத்திருக்க வேண்டும் என ஜவுளித்துறையினருக்கு மத்திய ஜவுளி, உணவு மற்றும் பொதுவிநியோகம், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார். மேலும் பருத்தி துறையை சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து, பருத்திப் பொருட்களின் மதிப்பைக் கூட்டுவதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மெய்நிகர் கூட்டம்

ஜவுளி அமைச்சகத்தின்கீழ் உள்ள 11 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்ற மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது. ஜவுளித்துறை தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள், இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய மில்ஸ் சங்கம் உள்ளிட்டவை இந்த கூட்டத்தில் பங்கேற்றன.

அமைச்சர் பங்கேற்பு

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், கடந்த ஆண்டு ஜவுளி ஏற்றுமதி சுமார் 42 அமெரிக்க டாலர்களாக இருந்தது என்றும், அடுத்த 5-6 ஆண்டுகளில் 100 அமெரிக்க டாலர்களை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த இலக்கை எட்டினால், இந்திய ஜவுளித்துறையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான பொருளாதார மதிப்பு 250 அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜவுளி இயக்கத்தின்கீழுள்ள நிதியை புதிய திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இந்திய ஜவுளித்துறையின் திறன்கள் ஜி-20 மாநாட்டில் வெளிப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். நிதியமைச்சர் அண்மையில் அறிவித்த ஷாப்பிங் திருவிழாக்களில் ஜவுளித் துறையினரும் பங்கேற்கலாம் என குறிப்பிட்டார்.

Input From: Livemint

Next Story
கதிர் தொகுப்பு
Trending News