Kathir News
Begin typing your search above and press return to search.

விமான நிலையம் திரும்பிய பின் பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் கூறியது என்ன?

பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியின் கான்வாய் வாகனம் மேம்பாலத்தில் நின்றது. இதற்கு அம்மாநில அரசின் பாதுகாப்பு குறைபாடே என உள்துறை அமைச்சகம் கூறியது. இதனிடையே சாலை மார்க்கமாக மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர் மோடி உங்கள் முதலமைச்சருக்கு நன்றி என பஞ்சாப் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

விமான நிலையம் திரும்பிய பின் பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் கூறியது என்ன?

ThangaveluBy : Thangavelu

  |  5 Jan 2022 1:26 PM GMT

பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியின் கான்வாய் வாகனம் மேம்பாலத்தில் நின்றது. இதற்கு அம்மாநில அரசின் பாதுகாப்பு குறைபாடே என உள்துறை அமைச்சகம் கூறியது. இதனிடையே சாலை மார்க்கமாக மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர் மோடி உங்கள் முதலமைச்சருக்கு நன்றி என பஞ்சாப் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.


பிரதமர் மோடி இன்று (ஜனவரி 5) ஃபெரோஸ்பூரில் ஒரு பேரணியில் உரையாற்றுவதற்காக பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவர் உரையாற்றும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்வதற்கான ஏற்பாடுகாளை அதிகாரிகள் செய்திருந்தனர். ஆனால் வானிலை சரியில்லாத காரணத்தினால் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அவர் சென்ற சாலையின் குறுக்கே விவசாயிகள் திடீரென்று திரண்டுள்ளனர். இதனால் பிரதமரின் கான்வாய் வாகனம் 20 நிமிடங்களாக மேம்பாலத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் விமான நிலையத்திற்கு புறப்பட்டார்.

இந்நிலையில், நான் உயிருடன் விமான நிலையத்திற்கு திரும்பியதற்கு உங்களின் முதலமைச்சருக்கு நன்றி என பஞ்சாப் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஒரு நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில்தான் பஞ்சாபில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பாஜக மற்றும் பிற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source: Puthiyathalimurai

Image Courtesy: The New Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News