Begin typing your search above and press return to search.
சீன உளவு கப்பல் இலங்கைக்கு வரவில்லை - காரணம் என்ன?
சீன உளவு கப்பல் இலங்கைக்கு வரவில்லை 600 கடல் மைல் தொலைவில் அனுமதிக்காக காத்திருக்கிறது.இந்தியாவின் எதிர்ப்பு எதிரொலி .

By : Karthiga
சீன உளவு கப்பல் 'யுவான் வாங்-5' கடந்த 11ம் தேதி இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு வருவதாக இருந்தது. 17ஆம் தேதி வரை அங்கேயே நங்கூரமிட்டு நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது .எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக அக்கப்பல் வருவதாக கூறப்பட்டது.
இருப்பினும் அது உளவு பார்க்க வாய்ப்பு உள்ளதால் அதன் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து கப்பலின் வருகையை தள்ளிப் போடுமாறு சீனாவிடம் இலங்கை கூறியது .
ஆனால் அதற்குள் சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடலில் நுழைந்து விட்டது .இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சீன உளவு கப்பல் அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு வரவில்லை இதை இலங்கை துறைமுக ஆணையம் நேற்று உறுதி செய்தது. அம்பந்தொட்டையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் அனுமதியை எதிர்பார்த்து அக்கப்பல் காத்திருப்பதாக தெரிவித்தது.
Next Story
