இந்தியாவின் 15வது ஜனாதிபதி யார்? நடைபெறுகிறது விறுவிறு தேர்தல்
சுதந்திர இந்தியாவின் 15 வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்க இருக்கிறது புது தில்லியில்.
By : Mohan Raj
சுதந்திர இந்தியாவின் 15 வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்க இருக்கிறது புது தில்லியில்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் வரும் 25ஆம் தேதி முடிவுக்கு வருகிறது, இந்த நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்க உள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
மொத்தம் உள்ள 10.87 லட்சம் ஓட்டு மதிப்பில் தற்போதைய நிலையில் முறுமுகுக்கு 6.ஏ 6 7 லட்சம் ஒட்டு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஓட்டு சீட்டு முறையிலேயே தேர்தல் நடக்க உள்ளது இதற்காக சிறப்பு மை உடைய பேனா உபயோகப்படுத்தப்படுகிறது.
எம்.பி'க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ'க்களுக்கு இளம் சிவப்பு நிறத்திலும் ஓட்டு சீட்டு அச்சிடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டளிக்கலாம் மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்று கூறுவதால் பெரும்பாலான எம்.பி'க்கள் நாடாளுமன்ற வளாகத்திலேயே வாக்களிக்க உள்ளனர். வரும் 21ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.