Begin typing your search above and press return to search.
இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்! தேதி அறிவித்த சபாநாயகர்!
இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்! தேதி அறிவித்த சபாநாயகர்!
By : Kathir Webdesk
வருகின்ற ஜனவரி 29ம் தேதி முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அனைத்து எம்.பி.க்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா இல்லை என்று தெரிந்த பின்னரே நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இந்த கூட்டத்தொடரில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொரோனா தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பலாம் என்று தெரிகிறது. வருகின்ற கூட்டத்தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.
Next Story