Kathir News
Begin typing your search above and press return to search.

தாவூத்'தின் 2 கூட்டாளிகளை கட்டம் கட்டி தூக்கிய NIA - விசாரணையில் பகீர் தகவல்கள்

மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் 2 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிரடியாக கைது செய்துள்ளது.

தாவூத்தின் 2 கூட்டாளிகளை கட்டம் கட்டி தூக்கிய NIA - விசாரணையில் பகீர் தகவல்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  13 May 2022 11:50 AM GMT

மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் 2 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிரடியாக கைது செய்துள்ளது.

மும்பையில் தேசிய புலனாய்வு முகமை கடந்த சில நாட்களாக தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் சொந்தமான 20 க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தியது இதில் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த ரெய்டு நடவடிக்கையை தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டா ஷகீல் அவரின் நெருங்கிய கூட்டாளியான அபூபக்கர் ஷேக், ஷபீர் அபூபக்கர் ஷேக் ஆகிய 2 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இரண்டு பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய தீவிர விசாரணையில், நாட்டின் முக்கிய இடங்களில் தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் அது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஷகீல் பாகிஸ்தானில் இருந்து கொண்டு மும்பையில் மிரட்டி பணம் பறித்தல், ஹவாலா பணம் பரிவர்த்தனை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News