Kathir News
Begin typing your search above and press return to search.

உங்களது வெற்றியை நாளை நாடு கொண்டாடும் ! பவீனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து !

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர்.

உங்களது வெற்றியை நாளை நாடு கொண்டாடும் ! பவீனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து !

ThangaveluBy : Thangavelu

  |  28 Aug 2021 6:58 AM GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர்.

அதன்படி டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல், சீனாவின் மியாவோ ஜாங்குக்கு எதிராக விளையாடி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு தற்போது வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: பவீனா பட்டேலுக்கு வாழ்த்துக்கள். சிறந்த முறையில் விளையாடி உள்ளீர்கள். உங்களுடைய வெற்றிக்காக மொத்த நாடும் வேண்டி கொள்கிறது. நாடு உங்களை நாளை கொண்டாடும். எந்த ஒரு நெருக்கடியும் இன்றி விளையாடுங்கள். ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் உங்களது திறமை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source, Image Courtesy : Dailythanthi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/28113448/The-whole-country-prays-for-your-success-PM-Modi-congratulates.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News