Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழர்களின் பண்பாட்டினை வெளிப்படுத்தும் பண்டிகை இது.. பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து.!

தமிழர்களின் பண்பாட்டினை வெளிப்படுத்தும் பண்டிகை இது.. பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து.!

தமிழர்களின் பண்பாட்டினை வெளிப்படுத்தும் பண்டிகை இது.. பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jan 2021 9:32 AM GMT

தைத்திருநாளையொட்டி தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் பண்டிகை இது என்று பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தமிழர்களின் சிறப்புமிக்க நாளாகும். இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது: ‘‘தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News