இந்த ஆண்டின் கடைசி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை.!
இந்த ஆண்டின் கடைசி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை.!
![இந்த ஆண்டின் கடைசி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை.! இந்த ஆண்டின் கடைசி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/51204d7c823701f021871897beedfc57.jpg)
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து அகில இந்திய வானொலியில் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தி வருகிறார். நாட்டில் செய்யப்பட்ட அடிப்படை தேவைகள், மற்றும் இன்னும் எந்த மாதிரியான திட்டங்களை செயல்படுத்தலாம் என பொதுமக்களிடம் கருத்து கேட்டுக்கொண்டு, பின்னர் அத்திட்டங்களை அறிவிப்பு வெளியிடுவார்.
இந்த நிகழ்ச்சியை கேட்பதற்காக பல கோடி மக்கள் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி கேட்பார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில், 72வது முறையாக ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார்.
இன்று காலை 11 மணி அளவில் ஒலிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டின் கடைசி நிகழ்ச்சி என்பதால், இந்த ஆண்டின் நிகழ்வுகள் மற்றும் வரவிருக்கும் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.