Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து மதத்திலிருந்து விலகியவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு மாற்ற மடங்கள் ஈடுபட வேண்டும்: பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா!

இந்து மதத்தை விட்டு வெளியேறி கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை தழுவியர்களை மீண்டும் நமது தாய் மதமான இந்து மதத்திற்கு கொண்டு வருவதற்கு மடங்கள் மற்றும் கோயில்கள் ஈடுபட வேண்டும் என்று பாஜக இளைஞர் அணியின் தேசியத் தலைவரும், எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தியுள்ளார்.

இந்து மதத்திலிருந்து விலகியவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு மாற்ற மடங்கள் ஈடுபட வேண்டும்: பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா!

ThangaveluBy : Thangavelu

  |  27 Dec 2021 5:47 AM GMT

இந்து மதத்தை விட்டு வெளியேறி கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை தழுவியர்களை மீண்டும் நமது தாய் மதமான இந்து மதத்திற்கு கொண்டு வருவதற்கு மடங்கள் மற்றும் கோயில்கள் ஈடுபட வேண்டும் என்று பாஜக இளைஞர் அணியின் தேசியத் தலைவரும், எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 25) அன்று உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின்னர் குருகுலத்தில் உள்ள மாணவர்களுடன் அவர் கூறியதாவது: இந்து மதத்தை விட்டு விலகி கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை தழுவியவர்களை மீண்டும் தாய் மதமான இந்து மத்திற்கு அவர்களை மாற்ற வேண்டும். அதனை மடங்கள் மற்றும் கோயில்களில் உள்ளவர்கள் மாற்றும் வேலையில் ஈடுபட வேண்டும். இந்துக்களுக்கு எஞ்சியுள்ள ஒரே வழியும் இதுதான். அதில் சென்றதில் பாகிஸ்தான் இஸ்லாமியர்ளும் அடங்குவார்கள்.


கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார காரணங்களுக்காக நமது மதத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவர்களை மீண்டும் கொண்டுவர வேண்டும். இதனை ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு மடமும் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Puthiyathalaimurai

Image Courtesy:Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News