Kathir News
Begin typing your search above and press return to search.

ஒடிசாவில் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை.!

ஒடிசாவில் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை.!

ஒடிசாவில் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை.!

Saffron MomBy : Saffron Mom

  |  13 Dec 2020 1:05 PM GMT

ஞாயிற்றுக்கிழமை காலை ஒடிசாவில் மாநிலத்தில் மல்காங்கிரி மாவட்டத்தில், சிறப்புச் செயற்பாட்டுக் குழு(SOG) மற்றும் மாவட்ட தன்னார்வ குழு(DVF) இணைந்து நடத்திய நடவடிக்கையில் ஒடிசா காவல்துறை ஒரு பெண் உட்பட இரண்டு மாவோயிஸ்ட்களைச் சுட்டுக் கொன்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 மணியளவில் வழக்கமாக SOG மற்றும் DVF குழு கஜல்மமுடி கிராமத்தில் சிங்கவரம் காட்டில் நடத்திய நடவடிக்கையில் அந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கினர் என்று காவல்துறை தலைமை இயக்குநர்(DGP) அபய் தெரிவித்தார்.

"எங்கள் குழுவும் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் இரண்டு மணிநேரம் அது தொடர்ந்து. துப்பாக்கிச் சூடு முடிவடைந்த பிறகு, எங்கள் குழு பெண்ணின் உடல் உட்பட இரண்டு மாவோயிஸ்ட் உடல்களைக் கண்டறிந்தது.

அதில் மற்றொரு ஆண் மாவோயிஸ்ட் சத்தீஸ்கர் பகுதியைச் சேர்ந்தவர்," என்று அவர் தெரிவித்தார். என்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து INSAS துப்பாக்கி, SLR துப்பாக்கி, மாவோயிஸ்ட் இலக்கியம் மற்றும் கிட் பாக்ஸ் முதலியவை கண்டெடுக்கப்பட்டது. விரைவில் நாங்கள் மாவோயிஸ்ட்களின் 'ஸ்வாபிமான் அஞ்சலை' முறியடிப்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் DGP தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News