Kathir News
Begin typing your search above and press return to search.

உதய்பூர் கொலையாளிகள் மீது வழக்கறிஞர்கள் சரமாரி அடி, உதை: நீதிமன்ற வாசலில் பரபரப்பு!

உதய்பூர் கொலையாளிகள் மீது வழக்கறிஞர்கள் சரமாரி அடி, உதை: நீதிமன்ற வாசலில் பரபரப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  3 July 2022 9:51 AM GMT

உதய்பூரில் டைலர் கன்னையா லால் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்த இரண்டு குற்றவாளிகளை விசாரணைக்காக ஜெய்ப்பூர் நீதிமன்றத்திற்கு நேற்று (ஜூலை 1) அழைத்து சென்றனர். அப்போது வெளியே காத்திருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். அது மட்டுமின்றி அவர்களின் ஆடைகளையும் கிழத்தனர்.

நாடு முழுவதும் கன்னையா லால் படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கொலையாளிகளை உடனடியாக தூக்கில் போடவும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதனிடையே கொலையாளிகளை ஜெய்ப்பூர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக போலீசார் ஆஜர்ப்படுத்தினர். அபபோது உள்ளே விசாரணை முடிந்த நிலையில் வெளியே போலீசார் பாதுகாப்புடன் குற்றவாளிகளை அழைத்து வந்தனர். அப்போது இரண்டு பக்கமும் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கொலையாளிகளை சரமாரியாக தாக்கினர்.

அவர்களுக்கு சிறிய காயங்களுடன் போலீசார் பத்திரமாக அழைத்து வந்து வேனில் ஏற்றினர். மேலும், குற்றவாளிகளின் ஆடைகள் மட்டும் கிழிந்த நிலையில் ஏற்றி அவர்களின் உயிர்களை காப்பாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Abp

Next Story
கதிர் தொகுப்பு
Trending News