Kathir News
Begin typing your search above and press return to search.

பொது சிவில் சட்டம் அமல்படுத்த குழு: குஜராத் அரசு முடிவு!

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குஜராத் அரசு முடிவு செய்து இருக்கிறது.

பொது சிவில் சட்டம் அமல்படுத்த குழு: குஜராத் அரசு முடிவு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 Oct 2022 3:36 AM GMT

நாட்டின் அனைத்து மத மொழி மற்றும் இன மக்களுக்கு ஒரே மாதிரியாக பொதுவான உரிமைகளை வழங்கும் விதத்தில் புது சிவில் சட்டம் ஒன்றை ஏற்றுவது மத்திய பா.ஜ.க அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இதனை கொண்டு வருவதற்கு முன்பாக நாட்டின் பல்வேறு தரப்பினருக்கிடையே அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்று எண்ணுகிறது.


இன்னும் ஒன்றரை வருட காலத்தில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் இது குறித்த விவாதம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் பாஜக ஆளுகிற குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தருணத்தில் அங்கு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒரு குழு அமைக்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இதை பத்திய உள்துறை அரசாங்கம் அமைச்சர் சங்வி அதுகுறித்து அகமதாபாத்தில் நேற்று தெரிவித்து இருந்தார். இது பற்றி அவர் கூறுகையில், புது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஒரு தனிக்குழு அமைப்பது மாநில அமைச்சர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


இந்த குழுவிற்கு உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை வகிப்பார். இதில் மூன்று அல்லது நான்கு உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என மத்திய அமைச்சர் ரூபாலா தெரிவித்தார். ஏற்கனவே பா.ஜ.க ஆளும் உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேஷ் ஆகிய இரண்டு மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த போவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Hindu News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News