Kathir News
Begin typing your search above and press return to search.

3 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளின் கல்விக்கான தேசிய கல்வித்திட்டம் - தர்மேந்திரா பிரதான் அறிமுகம் செய்தார்

3 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளின் அடித்தள கல்விக்கான தேசிய கல்வித் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தார்.

3 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளின் கல்விக்கான தேசிய கல்வித்திட்டம் - தர்மேந்திரா பிரதான் அறிமுகம் செய்தார்

Mohan RajBy : Mohan Raj

  |  22 Oct 2022 1:30 PM GMT

3 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளின் அடித்தள கல்விக்கான தேசிய கல்வித் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தார்.

மத்திய அரசின் தேசிய கல்வி என்.சி.எப் 2022 திட்டத்தில் குழந்தைகள் முன் பருவ பராமரிப்பு, கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிமுக நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், 'தேசிய கல்விக் கொள்கை 2020 இல் நடைமுறைப்படுத்துவதில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள குழந்தைகளின் அடித்தள நிலை தேசிய கல்வி திட்டம் முக்கிய படிநிலையாகும்.

இந்த NCF கல்வி திட்டத்தின் அடிப்படையில் அடுத்த சரஸ்வதி பூஜைக்குள் முழுமையான பாடப்பகுதிகள் பாடத்திட்டம் மற்றும் பாட புத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் என்.சி.இ.ஆர்.டி தயாரித்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

இந்த கல்வி திட்டம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் NCF 2022 கல்வி திட்டத்தில் பள்ளிக்கான தேசிய கல்வி திட்டம், குழந்தைகள் முன்பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசிய கல்வித் திட்டம், ஆசிரியர் கல்விக்கான தேசிய கல்வித் திட்டம், முதியோர் கல்விக்கான தேசிய கல்வித் திட்டம், ஆகிய நான்கு பகுதிகளிடம் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் முன் பருவ பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டத்தை உறுதிப்படுத்துவது எந்த ஒரு நாடும் அதன் எதிர்காலத்துக்கு செய்யப்படும் சிறந்த முதலீடாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source - Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News