Kathir News
Begin typing your search above and press return to search.

ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சர் ஜவடேகர்.!

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சர் ஜவடேகர்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 March 2021 4:44 PM IST

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது 60 வயதிற்கு மேற்படடோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளோருக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.





இந்நிலையில், அடுத்த மாதம் (ஏப்ரல்) 1ம் தேதியில் இருந்து இருந்து 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.




எனவே அதற் தகுதியான அனைவரும் உடனடியாக பதிவு செய்து, தடுப்பூசியை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News