Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து கடவுள் புகைப்படத்துடன் பேப்பரில் சிக்கன் வியாபாரம் - மர்ம நபரை தூக்கிய உ.பி. போலீஸ்!

இந்து கடவுள் புகைப்படத்துடன் பேப்பரில் சிக்கன் வியாபாரம் - மர்ம நபரை தூக்கிய உ.பி. போலீஸ்!

ThangaveluBy : Thangavelu

  |  5 July 2022 11:46 AM GMT

உத்தர பிரதேசத்தில் இந்து கடவுள் புகைப்படங்களுடன் இருந்த பேப்பரில் சிக்கன் வியாபாரம் செய்த தாலிப் உசேன் என்ற முஸ்லிம் வியாபாரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், சம்பாலில் வசித்து வருபவர் தாலிப் உசேன். இவர் சிக்கன் கடை அப்பகுதியில் நடத்தி வருகின்றார். இவர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பேப்பரில் வைத்து சிக்கன் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், இந்து கடவுள் புகைப்படத்துடன் இருந்த பேப்பரில் சிக்கன் வைத்து கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்துள்ளார். இது பற்றி கேள்விப்பட்ட இந்து அமைப்புகள் புகார் கூறியுள்ளது. இது பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை தொடர்ந்து தாலிப் உசேன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் தாலிப் உசேனின் கடைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் இந்து கடவுள் புகைப்படத்துடன் கூடிய பேப்பரில் வியாபாரம் செய்தது தெரியவந்தது. மேலும், போலீசாருக்கு தாலிப் உசேன் கத்தியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் துரிதமாக செயல்பட்ட போலீசார் தாலிப் உசேனை கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News