Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.40-50 கோடிக்கு விற்பனை!

தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.40-50 கோடிக்கு விற்பனை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Oct 2022 9:58 AM GMT

தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40-50 கோடிக்கு விற்கப்பட்டதாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

பஞ்சாபில் உள்ள பல்கலைக்கழகங்களின் பணிகளில் தலையிடுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, துணைவேந்தர்கள் நியமனத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக கூறினார்.

நான்கு ஆண்டுகள் தமிழக ஆளுநராக இருந்தேன். அங்கு மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40-50 கோடிக்கு விற்கப்பட்டது" என்று புரோகித் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது சட்டப்படி 27 பல்கலைகழகங்களுக்கு 27 துணை வேந்தர்களை நியமித்தேன். பஞ்சாப் அரசு என்னிடமிருந்து வேலை எப்படி நடக்கிறது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். பஞ்சாபில் யார் திறமையானவர், திறமையற்றவர் என்று கூட எனக்குத் தெரியவில்லை. கல்வி மேம்படுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

பல்கலைக்கழகங்களின் பணிகளில் ஆளுநர் தலையிடுகிறார் என்று பஞ்சாப் அரசு சொல்கிறது; உண்மையில் மாநில அரசு பல்கலைக் கழக விவகாரங்களில் தலையிட முடியாது என்றார்.

Input From: TimesNowNews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News