Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய ராணுவத்தில் சேர வேண்டாம் என்று எங்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது - கேரள இளைஞர் அக்சர் அலி பகீர் வாக்குமூலம்!

இந்திய ராணுவத்தில் சேர வேண்டாம் என்று எங்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது - கேரள இளைஞர் அக்சர் அலி பகீர் வாக்குமூலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 May 2022 2:29 AM GMT

இஸ்லாத்தை விட்டு வெளியேறியதற்காக தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு , கேரளாவைச் சேர்ந்த 24 வயது வாலிபர் மௌலானா அஸ்கர் அலி, இந்திய முஸ்லிம்கள் ராணுவத்தில் சேரக்கூடாது என்று கற்பிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (மே 6) ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது இதனைக்கூறினார். எங்கள் மதக் கொள்கைகளுக்கு எதிரான எங்கள் சொந்த சமூகத்தினரை நாங்கள் கொல்ல வேண்டியிருக்கும் என்பதால், மற்ற சமூகங்களை வெறுக்க வேண்டும் என்றும், இந்திய இராணுவத்தில் சேரக்கூடாது என்றும் எங்களுக்கு கற்பிக்கப்படுவதாக கூறினார்.

இந்திய மண்ணில் ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகளை நாங்கள் கொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்போம் என்பதால் இவ்வாறு எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. அவர்கள் முஸ்லிம்கள் இல்லையா? இன்னொரு முஸ்லிமைக் கொல்லக்கூடாது என்று நமது மதம் நமக்குக் கற்பிக்கிறது. இது உண்மையிலேயே ஆபத்தான கல்வி என்று அவர் கூறினார்.

அதே சித்தாந்தத்தை சமூகத்தின் சக உறுப்பினர்களிடம் பரப்புவதற்கு முஸ்லிம்கள் கற்பிக்கப்படுகிறார்கள் என்று அக்சர் அலி கூறினார். இது மிகவும் ஆபத்தானது. ஒரு அமைப்பைத் தடை செய்வது இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உதவாது. இஸ்லாம் தான் உண்மையான பாசிசம் என்று பேசி முடித்தார்.

மே 4 அன்று, அஸ்கர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியதற்காக முஸ்லிம் கும்பலால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது . கொல்லம் போலீசில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார். அலி தனது புகாரில், அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிறகு கும்பல் தன்னைத் தாக்கியதாகவும், அவ்வாறு செய்ததற்காக சமூகத்தில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் கூறினார்.

Inputs From: Opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News