Kathir News
Begin typing your search above and press return to search.

இளைஞர்கள் வெளிநாட்டுக்கு செல்லாமல் இருப்பதற்கான சூழலை உருவாக்குவோம்.. பிரதமர் மோடி உரை.!

இளைஞர்கள் வெளிநாட்டுக்கு செல்லாமல் இருப்பதற்கான சூழலை உருவாக்குவோம்.. பிரதமர் மோடி உரை.!

இளைஞர்கள் வெளிநாட்டுக்கு செல்லாமல் இருப்பதற்கான சூழலை உருவாக்குவோம்.. பிரதமர் மோடி உரை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Jan 2021 7:29 PM GMT

2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் தலைமைப் பண்பு குறித்த சுவாமி விவேகானந்தரின் அறிவுரையை நம் நாட்டின் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது: சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டு தனிநபர்கள் நிறுவனங்களை உருவாக்குவார்கள், இந்த நிறுவனங்கள் புதிய நிறுவனங்களை கட்டமைப்பவர்களை உருவாக்குகின்றன.

மேலும், இளைஞர்களின் உயர்ந்த லட்சியங்கள், திறமைகள், புரிதல், விருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கி மேம்பட்ட தனிநபர்களை உருவாக்குவதை இந்தக் கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது.

மேம்பட்ட கல்வி, தொழில்முனைவு வாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இளைஞர்களை வெளிநாடுகளுக்குச் செல்ல தூண்டாத வகையிலான ஒரு சூழலியலை உருவாக்க முயன்று வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News