Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்குவங்காளம்: பா.ஜ.க. இளைஞரணி துணைத்தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

மேற்குவங்காள மாநிலம் உத்தர் தினஜ்பூர் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவராக செயல்பட்டு வந்தவர் மிதுன் கோஷ் 37, இவர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவரது மரணத்திற்கு காரணமாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்குவங்காளம்: பா.ஜ.க. இளைஞரணி துணைத்தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

ThangaveluBy : Thangavelu

  |  19 Oct 2021 2:02 AM GMT

மேற்குவங்காள மாநிலம் உத்தர் தினஜ்பூர் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவராக செயல்பட்டு வந்தவர் மிதுன் கோஷ் 37, இவர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவரது மரணத்திற்கு காரணமாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் இருந்து பாஜகவினரை குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருப்பதாக பாஜக சார்பில் ஏற்கனவே ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக மீண்டும் ஒரு பாஜக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News