Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபடும் திரிணாமூல் காங்கிரஸ்: பா.ஜ.க. எச்சரிக்கை.!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கடந்த சில நாட்களாக செய்யும் அட்டூழியங்களால் மக்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபடும் திரிணாமூல் காங்கிரஸ்: பா.ஜ.க. எச்சரிக்கை.!

ThangaveluBy : Thangavelu

  |  4 May 2021 9:16 AM GMT

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கடந்த சில நாட்களாக செய்யும் அட்டூழியங்களால் மக்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து பாஜகவினர் மீதான தாக்குதல்களை திரிணாமூல் காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது. அப்பாவி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இது போன்ற செயல்களால் பலர் தங்களது வீடுகளை விட்டு வயல்வெளிகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.





இந்நிலையில், வன்முறையால் மேற்குவங்கம் பற்றி எரிகிறது. உடனே கட்டுப்படுத்துமாறு பா.ஜ., எம்.பி பர்வேஷ் சாஹிப் சிங் மம்தாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி பர்வேஷ் சாஹிப் சிங் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் குண்டர்களால் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை அன்று அசன்சோலில் உள்ள பாஜக அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.




மேலும், திரிணாமூல் கட்சியினர், பாஜக தொண்டர்களை கொலைவெறி தாக்குதலும், வாகனங்களை உடைப்பதும், வீடுகளுக்கு தீ வைப்பதையும் நிறுத்த வேண்டும். அவர்களை கட்சி தலைவராகிய நீங்கள் (மம்தா பானர்ஜி) கட்டுப்படுத்த வேண்டும். முதலமைச்சராகிய நீங்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனைவரும் டெல்லி வந்து செல்ல வேண்டும் என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள். இதனை ஒரு எச்சரிக்கையாக கருதுங்கள் எனக்கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News