'ஹாத்ராஸ் மாதிரி உதய்பூர் கண்ணையா வீட்டுக்கு என் போகவில்லை?' - ராகுல், பிரியங்காவை நோக்கி கேள்வி எழுப்பும் சி.டி.ரவி
'2020 ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்திற்கு சென்றது போல உதய்பூரில் தலை துண்டிக்கப்பட்ட தையல்காரர் கண்ணையா லால் வீட்டிற்கு ராகுல் காந்தி பிரியங்கா நேரில் செல்வார்களா' என சி.டி.ரவி கேள்வி எழுப்பி உள்ளார்.
By : Mohan Raj
'2020 ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்திற்கு சென்றது போல உதய்பூரில் தலை துண்டிக்கப்பட்ட தையல்காரர் கண்ணையா லால் வீட்டிற்கு ராகுல் காந்தி பிரியங்கா நேரில் செல்வார்களா' என சி.டி.ரவி கேள்வி எழுப்பி உள்ளார்.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து அண்மையில் பா.ஜ.க முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த கருத்தை உதய்ப்பூரை சேர்ந்த கண்ணையா லால் என்ற தையல்காரர் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து நேற்றைய தினம் கண்ணையா லால் கடைக்கு சென்ற இருவர் அவரின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் இந்தியா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கேள்வி எழுப்பிய பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, '2020ல் ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்துக்கு சென்றது போல் செவ்வாய்க்கிழமை மாலை உதய்பூரில் தலை துண்டிக்கப்பட்ட தையல்காரர் கண்ணையா லால் இல்லத்திற்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியின் செல்வார்களா? பயனில்லாத முதல்வர் அசோக் கெலாட் அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவர்களா? ஒரு இந்துவை இரண்டு முஸ்லிம் கொன்றதாக அவர் ராஜினாமா செய்ய சொல்லுவார்களா?' என கேள்வி எழுப்பி உள்ளார்.