Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா? அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.!

கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா? அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.!

கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா? அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2020 8:04 AM GMT

கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது பற்றி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளார். கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், மாநிலத்தில கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க நிபுணர்கள் குழுவினர் அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். அதன்படி கர்நாடகத்தில் அடுத்த மாதம் ஜனவரி 1ம் தேதிக்கு பின்பு பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இது பற்றி முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார், சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கிருஷ்ணா இல்லத்தில் மதியம் 12.30 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம், அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News