Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகள் - காஷ்மீர் பண்டிட் ஆசிரியை சுட்டுக்கொலை!

பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகள் - காஷ்மீர் பண்டிட் ஆசிரியை சுட்டுக்கொலை!

ThangaveluBy : Thangavelu

  |  1 Jun 2022 11:57 PM GMT

ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதில் ஒரு ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஜினி பாலா 36, இவர் குல்காம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவர் ஒரு காஷ்மீரி பண்டிட் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆசிரியை ரஜினி பாலா வழக்கம் போல இன்று பள்ளிக்கு வந்து தனது அன்றாட பணிகளை மேற்கொண்டார். அப்போது அங்கு திடீரென்று பள்ளிக்குள் துப்பாகியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் ரஜினி பாலா மீது சராமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அருகில் இருந்த ஆசிரியைகள் ரஜினியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பள்ளியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News