Begin typing your search above and press return to search.
தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆண்களை விட பெண்களிடம் ஆர்வம் குறைவு.!
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது மின்னல் வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
By : Thangavelu
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது மின்னல் வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதே போன்று தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆண்களை விட பெண்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் எடுக்கப்பட்ட தகவல்களின்படி தற்போது வரை 1000 ஆண்களுக்கு 854 பெண்களே தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
இதில் சத்தீஸ்கர் மற்றும் கேரளா மாநிலத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்வருகின்றனர். எனவே அனைத்து பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story