Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொழிலாளர்கள்தான் அஸ்திவாரம் - தொழிலாளர் நலத்துறை மாநாட்டில் பிரதமர்

நாட்டின் அடுத்த 25 ஆண்டுகளாக முன்னேற்ற பயணத்தில் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொழிலாளர்கள்தான் அஸ்திவாரம் - தொழிலாளர் நலத்துறை மாநாட்டில் பிரதமர்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Aug 2022 7:58 AM GMT

நாட்டின் அடுத்த 25 ஆண்டுகளாக முன்னேற்ற பயணத்தில் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்


அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற இரண்டு நாள் தேசிய தொழிலாளர் மாநாடு திருப்பதியில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார், கடந்த எட்டு ஆண்டுகளில் தேவையற்ற பல சட்டங்களை நீக்கி தொழிலாளர் சட்டங்களில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

அடுத்த 25 ஆண்டுக்கான அமிர்த காலத்தில் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது தொழிலாளர் சட்டத்தின் பங்கு மிக முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொழிலாளர் சமூகத்தின் ஆற்றலுக்கு கூடுதல் வலு சேர்த்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


Source - Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News