Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவை கட்டுபடுத்துவதில் நீங்கதான் பெஸ்ட் ! பாராட்டு மழையில் யோகி ஆதித்யநாத் !

Breaking News.

கொரோனாவை கட்டுபடுத்துவதில் நீங்கதான் பெஸ்ட் ! பாராட்டு மழையில் யோகி ஆதித்யநாத் !
X

TamilVani BBy : TamilVani B

  |  14 Sept 2021 4:15 PM

இந்திய மாநிலங்களில் அதிக மக்கள் தொகையை கொண்டது உத்ரபிரதேசம். இந்த மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிக அளவில் பாதித்தது. கடந்த ஏப்ரல் மாதம் 3லட்சத்திற்கு அதிகமான தொற்று பாதிப்பு இருந்தது.

இதனை தொடர்ந்து பாதிப்பை குறைக்க மாநில அரசு பல சீரிய முயற்சிகளை எடுத்து வந்தது. இதனால் அங்கு பாதிப்பு வெகுவாக குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது உ.பி ஆச்சரியபடும் வகையில் கொரோனா தொற்றை கட்டுபடுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய எம்.பி ஜேசன் வுட், தனது சமூக வலைதள பக்கம் மூலம் உ.பி முதல்வரை பாராட்டியுள்ளார்.

அதில் அவர், உத்ரபிரேதஏச அரசு வியக்க வைக்கும் அளவில் கொரோனா பரவலை கட்டுபடுத்தியிருப்பதாகவும் உ.பி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

உ.பியில் உள்ள 75 மாவட்டங்களில் 59 மாவட்டங்களில் புதியதாக கொரோனா தொற்று பாதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

Source: News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News