Kathir News
Begin typing your search above and press return to search.

10 அடி குழிதோண்டி புதைக்கப்படுவீர்கள்.. மாபியாக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ம.பி., முதலமைச்சர்.!

10 அடி குழிதோண்டி புதைக்கப்படுவீர்கள்.. மாபியாக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ம.பி., முதலமைச்சர்.!

10 அடி குழிதோண்டி புதைக்கப்படுவீர்கள்.. மாபியாக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ம.பி., முதலமைச்சர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Dec 2020 6:37 PM GMT

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு நல்லாட்சி தினவிழா நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது, ‘‘மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறவில்லை என்றால், அனைவரும் 10 அடி குழிதோண்டி புதைக்கப்படுவீர்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாமலேயே போய்விடும் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

இவரது பேச்சு மத்திய பிரதேசத்தில் உள்ள மாப்பியாக்களுக்கு குளிர் காய்ச்சல் வந்திருக்கும் என்று அம்மாநில பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயத்தில் மாநில முதலமைச்சர் ஒருவரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருக்கின்றாரே என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எது எப்படியோ மாப்பியாக்கள் இன்றி மக்கள் நலமுடன் வாழ்வதே அனைவரின் விருப்பமும் கூட ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News