Kathir News
Begin typing your search above and press return to search.

இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்.. திருவள்ளூவர் பிறந்த நாளில் பிரதமர் மோடி உருக்கமான ட்வீட்.!

இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்.. திருவள்ளூவர் பிறந்த நாளில் பிரதமர் மோடி உருக்கமான ட்வீட்.!

இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்.. திருவள்ளூவர் பிறந்த நாளில் பிரதமர் மோடி உருக்கமான ட்வீட்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Jan 2021 9:44 AM GMT

திருவள்ளூர் பிறந்த தினத்தை ஆண்டுதோறும் வள்ளூவர் தினம் என்று கொண்டாடி வருகிறோம். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்: போற்றுதலுக்குரிய திருவள்ளூவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.

அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் சபை என்றாலும்.. அல்லது இந்திய பாராளுமன்றத்தில் உரையாற்றினாலும் சரி.. அல்லது அரசியல் மேடையில் உரையாற்றினாலும் சரி.. எப்போதும் திருக்குறளை பிரதமர் மோடி மேற்கோள்காட்டி பேசி வருகிறார். உலகம் முழுவதும் திருவள்ளூவரின் சிந்தனைகளை எடுத்து கூறிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News