Kathir News
Begin typing your search above and press return to search.

உச்சகட்ட அழிச்சாட்டியம்! பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்த ஜுபைர் மற்றும் சுனா!

Zubair and Chuna arrested for raping a cow and filming the act, police searching for two others involved

உச்சகட்ட அழிச்சாட்டியம்! பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்த ஜுபைர் மற்றும் சுனா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Feb 2022 12:50 PM GMT

ராஜஸ்தானில் பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அல்வார் மாவட்டத்தில், சுஹாத்பூர் பகுதியில், பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு நபர்கள் பசுவுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளும் வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

இந்த சம்பவம் டைனிக் பாஸ்கரில் செய்தியாக பதிவாகியுள்ளது . அல்வார் மாவட்டத்தின் சௌபாங்கி காவல் நிலையப் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுஹாத்பூரைச் சேர்ந்த வாரிஸ், ஜுபைர், சுனா மற்றும் தலீம் ஆகிய நான்கு பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. சுபைர் மற்றும் சுனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் மற்ற இரண்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.





பிப்ரவரி 10 ஆம் தேதி, இந்த நான்கு பேரும் ஒரு பசுவை அருகிலுள்ள மலைச் சரிவுக்கு அழைத்துச் சென்றபோது, ​​அவர்களில் மூவர் பசுவுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டபோது, ​​​​ஒருவர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பசுவை பலாத்காரம் செய்வதற்கு முன் சத்தம் வராமல் இருக்க அதன் வாயை அடித்து நொறுக்கியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சாந்தனு குமார் சிங் கூறியதாவது: தகவல் கிடைத்ததும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். புகார் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினோம். தற்போது குற்றவாளிகளில் இருவரை நாங்கள் கைது செய்துள்ளோம், மற்ற இருவரையும் விரைவில் பிடிப்போம் என்றார்.

இதற்கு முன்னதாக Toufeek Ahmed என்ற 20 வயது இளைஞன், 2021 ஆம் ஆண்டு, பெண் நாயை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது சிசிடிவி பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அகமது மீது வகோலா காவல் நிலையத்தில் 'இயற்கைக்கு மாறான உடலுறவு' குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News