Kathir News
Begin typing your search above and press return to search.

சர்ச்சைக்குரிய ஆசிரியர் பணியிடை நீக்கம்.. தனியார் பள்ளி அதிரடி..!

சர்ச்சைக்குரிய ஆசிரியர் பணியிடை நீக்கம்.. தனியார் பள்ளி அதிரடி..!

ParthasarathyBy : Parthasarathy

  |  24 May 2021 12:47 PM GMT

சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன். இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வந்த புகாரை அடுத்து அசோக் நகர் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


இந்த செய்தியை அறிந்த பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்தது, அது மட்டுமின்றி அவர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்தது. பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடக்கும் போது ஆபாச ரீதியில் அணுகியதாக புகார் எழுந்த நிலையில் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதில் ஆசிரியர் தவறு செய்துள்ளதாக தகவல் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News