Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த விதைகளை இப்படி எடுத்துக்கொண்டால் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்..!

இந்த விதைகளை இப்படி எடுத்துக்கொண்டால் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்..!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 May 2021 1:00 AM GMT

நம்முடைய வீட்டிலும் கொத்தமல்லி விதைகள் கண்டிப்பாக இருக்கும். அந்த கொத்தமல்லி விதைகளால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதுவும் இந்த கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் எல்லாம் ஏற்படும். தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் கிருமிகளை உடலில் அண்டவிடாமல் அப்படியே வெளியே துரத்தி விடும் பல்வேறு நன்மைகளை கொண்ட விதையாக இது திகழ்கிறது. இதற்கு நீங்கள் இரவில் தண்ணீரில் சிறிதளவு கொத்தமல்லி விதைகளை ஊற வைத்த அப்படி இரவு முழுவதும் ஊறவைத்த இந்த தண்ணீரை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


அப்படி குடித்தால் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண் அரிப்பு, கண் வீக்கம் மற்றும் கண் சிவத்தல் போன்ற பிரச்சினைகளைச் சரிசெய்யும். அதோடு இந்த நீர் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். எனவே நீரிழிவு நோயாளிகள் இந்த தண்ணீரை தினமும் குடிப்பது மிகவும் நல்லது. மேலும் வெறும் வயிற்றில் இதை குடிப்பதன் மூலமாக கிருமிகளில் நம்முடைய குடலில் இருந்து இந்த தண்ணீர் அகற்றி விடுகிறது. மேலும் இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற ஒரு விஷயமாக உள்ளது எனில் அவர்கள் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த தண்ணீரை குடிப்பதன் மூலமாக நிச்சயம் மாற்றத்தை உணரலாம்.


இதை தேநீராக அருந்தலாம். இதற்குச் சுக்கு மல்லி என்றும் சொல்லுவார்கள். அந்த காலத்தில் நமது பெற்றோர்கள் அன்றாடம் இந்த சுக்கு மல்லி காப்பி தான் பருகினார்கள். ஆனால் தற்போது நாகரிகம் என்ற பெயரில் நாம் இதை பருகுவதற்கும் மறுத்து வருகிறோம். இதற்கு சுமார் 150 மி.லி தண்ணீரில் 3 கிராம் கொத்தமல்லி விதைகள் என்கிற விகிதத்தில் சேர்த்து இதை கொதிக்க வைத்து குடிக்கலாம். இப்படி குடிப்பதால் தலைவலி பிரச்சினை குணமாகும். அதோடு எலும்புகளை பலமடைந்து, எலும்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும். கொத்தமல்லி விதைகள் மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News