Kathir News
Begin typing your search above and press return to search.

நமது மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கும் அரியவகை மூலிகை.!

நமது மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கும் அரியவகை மூலிகை.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Jun 2021 1:50 AM GMT

வயது அதிகமாகும் பொழுது உடல் பலவீனமாவது இயற்கையான ஒன்று தான். ஆனால் இந்த மூலிகையை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் பலமடையும். இளைஞர்களுக்கு சவால் விட்டு வீறுகொண்டு எழச்செய்யும் அரிய மூலிகை தான் நீர்ப்பிரமி. மூளையில் செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் மூலிகை இந்த நீர்ப்பிரமி. நீர்வளம் அதிகமாக இருக்கும் இடங்களில் தான் இந்த நீர்ப்பிரமி செழித்து வளரும். வழுவழுவென சதைப்பிடிப்புடன் முட்டை வடிவ இலைகளைக் கொண்டிருக்கும்.


இதன் இலைகளை கீரைப் போல சமைத்து சாப்பிட்டு வர சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை எல்லாம் நீங்கி மலச்சிக்கல் பிரச்சினையும் குணமடையும். உங்களுக்கு மனசோர்வு, மனக்கஷ்டம் இருந்தாலும் இந்த நீர்ப்பிரமியைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்ல பலம் சேர்ந்து மனம் சம்பந்தமான பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.


ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு நீர்ப்பிரமி இலைப்பொடி, அமுக்கரா பொடி ஆகியவற்றை கலந்து பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். உடற்சூடு பிரச்சினை நீங்க இந்த நீர்ப்பிரமி மிகவும் உதவியாக இருக்கும். நீர்ப்பிரமி இலைகளை அரைத்து பாலில் கலந்து கொடுத்தால் கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான குளிர்ச்சி கிடைக்கும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் இது வேருடன் அகற்றும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News