Kathir News
Begin typing your search above and press return to search.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

ParthasarathyBy : Parthasarathy

  |  17 Jun 2021 1:41 AM GMT

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வாறு இருக்கையில், நேற்று அமைச்சர் அளித்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


காவல்துறையில் வழக்குப்பதிவை அடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதனையடுத்து, மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என ஐகோட்டில் நடிகை சாந்தினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகை தாக்கல் செய்த மனு நீதி மன்றத்திற்கு வராததால் இந்த வழக்கு விசாரணையை கடந்த 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது காவல் துறை தரப்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே மணிகண்டன் முன்ஜாமீன் மனுவை ஏற்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாக கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News