Kathir News
Begin typing your search above and press return to search.

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' - இதுவரை மத்திய அரசுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதங்கள்!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் - இதுவரை மத்திய அரசுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதங்கள்!

Mohan RajBy : Mohan Raj

  |  17 Jun 2021 11:15 AM GMT

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் ஸ்டாலின் முதன்முறையாக டெல்லி சென்றுள்ளார். இதுவரை ஸ்டாலின் பதவி ஏற்று 40 நாட்களை நெருங்கியும் கடிதங்கள் வாயிலாகவே மத்திய அரசை தொடர்பு கொண்டார். அப்படி அவர் எழுதிய கடிதங்களை பார்ப்போம்.

முதல் கடிதம் எழுதியது மே 7-ம் தேதி, தன் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அதனுடன் தமிழகத்திற்கு ஆக்ஸிஜன் தேவையை கோரியிருந்தார்.

அடுத்தபடியாக செங்கல்பட்டில் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் மத்திய அரசின் தடுப்பூசி உற்பத்தி மையத்தைத் தமிழ்நாடு அரசுக்குத் தருமாறு கேட்டு மே 26-ம் தேதி மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அதனை தொடர்ந்து நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவு மற்றும் தகுதித் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தது அடுத்த கடிதத்தையும் எழுதினார்.

ஜூன் 5-ம் தேதி 'எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி முடித்துச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் பணியை விரைவுபடுத்துங்கள். இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்' என கடிதம் எழுதினார் ஸ்டாலின். உதயநிதி போல செங்கல்லை எடுத்து வந்து இதுதான் எய்ம்ஸ் என புரியாத குழந்தைபோல் காமெடி தர்பார் நடத்தவில்லை.

இவ்வாறாக கடிதங்கள் வாயிலாக தேவைகளை வலியுறுத்தி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் பிரதமரை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். தேர்தல் பிரச்சாரம் வேறு ஆட்சி நடத்தும் முறை வேறு என தி.மு.க புரிந்துகொண்டு செயல்பட துவங்கிவிட்டது எனலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News