Kathir News
Begin typing your search above and press return to search.

மாம்பழம் சாப்பிட்ட பிறகு நீங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ளவே கூடாத சில உணவுகள்.!

மாம்பழம் சாப்பிட்ட பிறகு நீங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ளவே கூடாத சில உணவுகள்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Jun 2021 12:31 AM GMT

இந்தியாவில் அல்போன்சா, படாமி, சிந்தூரா, தோடாபுரி, மல்கோவா என பல்வேறு வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகிலேயே மாம்பழங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதும் இந்தியா தான். எனவே, பல நாடுகளுக்கும் இந்திய வகை மாம்பழங்கள் ஏற்றுமதியாகின்றன. மாம்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் இருந்தாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது. அதே போல மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிட்டால் சில உடல்நல பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.


தயிரும் நல்லதுதான் மாம்பழமும் நல்லதுதான். ஆனால் தயிர் குளிர்ச்சி என்பதாலும் மாம்பழம் சூடு என்பதாலும் இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் வெப்பமுயும் குளிரும் ஒருசேர சமாளிக்க உடலுக்கு கடினமாகிவிடும். இதனால் தோல் சார்ந்த பிரச்சினைகள், உடலில் நச்சு தேக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே தயிர் மாம்பழம் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்த்து விட வேண்டும். மாம்பழம் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது. மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் மாம்பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வயிற்று வலி, நெஞ்சுக்கரிப்பு மற்றும் செரிமானமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு குறைந்தது அரை மணி நேரமாவது தண்ணீரை தவிர்ப்பதும் நல்லது.


மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு காரமான உணவுகள் சாப்பிட வேண்டாம். ஏனெனில் இது வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தி சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு, பாகற்காய் சாப்பிடுவது குமட்டல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு பாகாற்காய் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News